Monday, December 22, 2014

சிவப்புக் கடல்

 ஈர வலைதான்  காயும் முன்னே எங்கள்
 ஈரக் குலைய  அறுப்பதும் ஏன்?

 ராவோடு ராவாக கடலுள்ள வெளிச்சம் இல்லை
 ராட்சசன் போலே படையோடு வந்தால் தொல்லை

 எப்படி தெரியும் எங்களுக்கு சர்வதேச கடல் எல்லை
 எப்பதான் நிம்மதியா இருக்கும் எங்க பெண்டாட்டி பிள்ளை

எங்கள அறியாம தாண்டி வந்துட்டோம் இப்ப
சிங்கள வெறியால சாய்ந்து வீழ்ந்துட்டோம்